இந்த கல்லூரியின் கடைசி நாள்
எனக்கும் தான்…
வெளியேறாவிட்டால்
வெளியேற்றப்படுவோம்
மிஸ் யூ சொல்லி கண்கலங்கும்
அன்பு உள்ளங்கள்
பின் நாட்களில்
மிஸ்டு கால் கொடுத்தால் போதும்
நல்லிரவு 12மணிக்குக் கூட
அழைத்துப் பேசுவேன்…
மாலதி அக்கா
மைதீன் பாத்
எஸ்தர் மேம்
அகல்யா
பேச்சாத்தாள்
பாலா
கோபி
மை சோபி
உங்கள் எல்லோரையும்
அவ்வளவாக மிஸ்பன்ன மாட்டேன்
நான் மிஸ் பன்னுவதெல்லாம்
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும்
அந்த செமினார் ஹால்
பிறகு
அந்த வகுப்பறை
அந்த கடைசி பெஞ்ச்
அந்த புன்னை மரம்
முக்கியமாக நூலகம்
இன்னும்
அந்த கேண்டீன்
அந்த பேருந்து நிறுத்தம்
அப்படியே
ராஜா பாடலை ஒலிக்கவிடும்
ஓட்டுநரையும்
கண்ணத்தில் குழி விழும்
நடத்துநரையும்
மிஸ் பன்னுவேன்
இந்த கல்லூரிக்கு
நான் ஒரு ஸ்பெசல் என்றார்
என் பேச்சை
என் சிரிப்பை
என் கலகலப்பை
என் திறனை
என் ஆளுமையை
இதற்கு முன்பு படித்தவர்களிடம்
பிரின்ஸிபல் பார்த்ததே இல்லையாம்
அந்த ஒரு பாராட்டுக்கு மயங்கிதான்
அவருக்கு
டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டராக
வேலைப் பார்த்துவந்தேன்
அப்பறம் படிப்பு
ஒரு ஓரமாக படித்துக்கொண்டிருந்தேன்
உங்களுக்கு மிஸ் யூ சார்
என்னைக் காதலித்த
அன்பு தம்பிகளுக்கு
பறக்கும் முத்தங்களைப்
பரிசளிக்கிறேன்
என் திமிருக்காக மட்டுமே
என்னைக் காதலித்தவனுக்கு
கூடுதலாய்
மொங்க பீர் வாங்கித் தருகிறேன்
எல்லோரிடமும்
நல்லுறவே பேணி வந்துள்ளேன்…
கால் விரல்களால்
என் குதிங்காலைச் சுரண்டிய
ஒருவனிடம் மட்டும்
எரிந்துப் பேசியதோடு
நெடு நாட்களாக
பேசாமலே இருந்துவிட்டேன்
அவன் மீதும்
எந்த வருத்தங்களும் இல்லை…
இப்போது
அவன் வந்து பேசினால்
முட்டித் தெரியச் சேலையை
தூக்கி காண்பிப்பேன்
இரண்டு சுரண்டுதானே
பாவம் சுரண்டிவிட்டு போகட்டும்…
பெரும்பாலும்
தோழிகள் சமைக்கப் போவீர்கள்
தோழர்கள் வேலைக்குப் போவீர்கள்
நான்
விஜய் தொலைக்காட்சிக்கு
கண்டண்ட் ஆகப் போகிறேன்
பெரிய ஆளாகி நின்றால்
நீங்கள் ”இது என் ஃபிரண்ட்” என
அங்கலாய்க்க வேண்டும்….
திடீரென
கல்யாணப் பத்திரிக்கையோடு
வந்து நின்றாலும் நிற்பேன்
அபோது
அந்த அங்கலாய்க்கும் வாய்ப்பு
உங்களுக்கு வழங்கப்படவில்லை
என்பதைப் புரிந்துகொண்டு
சுகர் தூக்கலாக போட்டு
ஒரு டீ போட்டுத் தரவேண்டும்….
- - திவ்யா ஈசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக