என் இருக்கையில்
என்னை அமரவிடவில்லை
கடைசி இருக்கையில் கூட
எனக்கு இடம் தரப்படவில்லை
வாசலுக்கு வெளியே
கழுத்தைப் பிடித்து தள்ளியதைப் போல்
புறக்கணிக்கப்பட்டேன்…
அதனால் என்ன
அந்த வளாகத்தின் எதிரே
பார்க்கில் நிறைய இருக்கைகள் இருந்தன
அங்கு வந்து அமர்ந்துகொண்டேன்…
என் எதிரே
”துன்பம் வரும் நேரங்களில் சிரிங்க”
என்று சொன்னவன்தான்
புறக்கணிக்கப்பட்டதன்
வருத்தங்களைச் சுமந்தபடி
உம்மென்று அமர்ந்திருந்தான்
நான்
சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்…
- - திவ்யா ஈசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக