30 நவம்பர் 2023

இறுகிளியின் கருணை

இந்த வாழ்க்கை
என்மீது மட்டும் ஏன்
சுமத்திக்கொண்டே இருக்கிறது?
பாரம் தாங்காமல்
அச்சாணி உடைந்துவிடும் அளவுக்கு
வண்டி தடுமாறி தடுமாறிதான்
 நகர்ந்துக்கொண்டிருக்கிறது

இன்று  நான்
ஒரு ஆசுவாசத்திற்காக
வீட்டின் புறக்கடையில் உள்ள
சிற்றோடையின் நடுவில் தனித்திருக்கும்
ஒரு  பாறையில் ஏறி அமர்ந்தேன்
இங்கு ஆட்களே இல்லை
நீர் சலசலத்துப் போனது
கல்லங்காரி மீன்கள் அப்பியிருந்தன
வானம் வெளிச்சமாய் இருந்தது
எதிரே பெரும்  மலை தெரிந்தது
காற்றில் மரங்கள் சடசடத்தது
வனத்தில் ஏதோ ரீங்காரம் கேட்டது
பக்கத்தில் பலா மணம் வீசியது
ஆனாலும்
கரடி வருவதுகுறித்து
பயமில்லாமல்தான் இருந்தேன்

ஒர் இறுகிளி பெற்றம்
கீச்சிட்டப்படியே
என்னைக் கடந்து போனது
சிட்டுக்குருவியினும் சிறிதாய் இருக்கும்
அந்த இறுகிளியில் ஒன்றுதான்
என் பாரத்தில் இருந்து
110கிலோ மூட்டையை த் தூக்கிப் போனது

நான் வீடு திரும்பியப் போது
அத்தனை லேசாக இருந்தேன்

- திவ்யா ஈசன்


கருத்துகள் இல்லை: