இரட்சிப்பின் மட்டன்
பிரியானி
ஏழைகளுக்கு பரிமாரப்படுகிறது
இரத்தமும் சதையுமாய்
காரம் கொஞ்சம்
தூக்கலாய்
தட்டில் அவரே இருக்கிறார்
கர்த்தர் நல்லவர்
என்பதை
பந்தியில் வந்து
ருசித்துப்பாருங்கள்….
பரிமாறுபவன் கொழுத்து
வீங்குகிறான்
உண்பவன் முன்பினும் மெலிகிறான்
ஊழியக்காரனுக்கு;
கார், பங்களா
ஜெருசலேம் சுற்றுலா
வங்கி இருப்பு
சுகபோக வாழ்க்கை
எல்லாம் தந்தீர்
ஸ்தோத்திரம் ஆண்டவரே!
வக்கற்றவனுக்கு;
இருப்பதையும் சுரண்டிவிட்டு
வெறும் இரட்சிப்பு
மட்டும்தானா!!
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக