எல்லேறு சோம்பி மேலேறும் காலம்
அல் நீங்கி நீங்கித் தளரும்
புல்லேறு துளி எரிபுகை சூழ
மெல்லப் புலரும் பின்காலைப் பொழுது
வல்வாடை கதிர்ஊட வெளியாகித் தணியும்
வல்வாடை கதிர்ஊட வெளியாகித் தணியும்
கல்வரை சூல் மலை அடுக்கம்
அதல்வாழும் கயம் உடை அருவிப்புறம்
அதல்வாழும் கயம் உடை அருவிப்புறம்
அதவம் தீம்கனி வண்தத்தை கொய்யும்
இதழ்விரீஇ முல்லை படர்தோரணம் ஒளிரும்
தேதண்ணி உகும் தேயிலைக் காடும்
கூதளியும் தாழப்பரந்து பூத்துணங்கும் ஊர
மல்லி கடிமலர் பற்றி நுகர்நாசியென
பல்நுனிநா கொணர்ந்தேன் முதல்முத்தத்தை
கொல்லைக் கொரோனா வந்தவா யாயினும்
இல்காவல் தாண்டி புறக்கடை வாடா
எல்லைமீறி யெடுடா கொஞ்சம் - என்
மெல்லுதடு மூடிய மெய்படு அவத்தையை!!!
எல்லைமீறி யெடுடா கொஞ்சம் - என்
மெல்லுதடு மூடிய மெய்படு அவத்தையை!!!
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக