நீ மட்டும்தான் அழகியாய் இருந்தாய்
நண்பர்களிடம் சுவாரஸ்யம் மாறாமல்
வர்ணித்துக்கொண்டே இருப்பேன்
நீதான் நீயேதான் பேரழகி என்று
வர்ணித்துக்கொண்டே இருப்பேன்
நீதான் நீயேதான் பேரழகி என்று
உன் காதோரம் பூனைமுடி இருந்தது
கலர்கலராய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாய்
மல்லி மணக்க மணக்க கடந்து செல்வாய்
நீ பேசினால் மெட்டெடுத்து பாடுவது போலிருக்கும்
என்னைப் பார்த்தவுடன் அந்த கண்கள்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல் படப்படக்கும்
உன் வலக்கண்ணத்தின் வழவழப்புக்கு
ஒரே உவமை உன் இடக்கண்ணம்தான்
நீலப் பாவடையும் வெள்ளைச் சட்டையும்
தேவதையின் உடையென்றே எண்ணியிருந்தேன்
உன் பெயர் கிறுக்கப்படாத புத்தகங்கள்
ஒருபோதும் பாடத்திட்டமாக இருந்ததில்லை
சனி ஞாயிறு சிறப்புவகுப்புக்காக போராடுவேன்
என் கனவுலகில் நீயே வழிய வருவாய்
மனசுக்குள் இளையராஜா பாடிக்கொண்டே இருப்பார்
கலர்கலராய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாய்
மல்லி மணக்க மணக்க கடந்து செல்வாய்
நீ பேசினால் மெட்டெடுத்து பாடுவது போலிருக்கும்
என்னைப் பார்த்தவுடன் அந்த கண்கள்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல் படப்படக்கும்
உன் வலக்கண்ணத்தின் வழவழப்புக்கு
ஒரே உவமை உன் இடக்கண்ணம்தான்
நீலப் பாவடையும் வெள்ளைச் சட்டையும்
தேவதையின் உடையென்றே எண்ணியிருந்தேன்
உன் பெயர் கிறுக்கப்படாத புத்தகங்கள்
ஒருபோதும் பாடத்திட்டமாக இருந்ததில்லை
சனி ஞாயிறு சிறப்புவகுப்புக்காக போராடுவேன்
என் கனவுலகில் நீயே வழிய வருவாய்
மனசுக்குள் இளையராஜா பாடிக்கொண்டே இருப்பார்
இன்றுதான் கடைசியாய் பார்க்கிறேன்
என்றறியாத பிரிவு உபச்சார நாளன்று
நீலம்- மஞ்சள் தாவணியில்
நீள் சடையில் மல்லிகைச் சூடி
மைப் பூசியக் கண்ணில்
மையல் தெறிக்க தெறிக்க
வெள்ளிக் கொலுசுகள் சினுங்க
பள்ளியை இந்திரலோகமாக்கி
நீ ரம்பை ஊர்வசி மேனகையாகி
அங்கும் இங்கும் உலவினாய்
பத்து முடித்து இருபது ஆண்டுகளாயிற்று
இன்னமும் அதே நீலம்- மஞ்சள் தாவணியில்
அப்படியேதான் என்னுள் உலவிக்கொண்டிருந்தாய்
ஏதேச்சையாக ஷாப்பிங் மால் வாசலில்
காளியம்மன் சாயலில் இருந்த
அந்த பெண்ணை பார்க்கும் வரை
என்றறியாத பிரிவு உபச்சார நாளன்று
நீலம்- மஞ்சள் தாவணியில்
நீள் சடையில் மல்லிகைச் சூடி
மைப் பூசியக் கண்ணில்
மையல் தெறிக்க தெறிக்க
வெள்ளிக் கொலுசுகள் சினுங்க
பள்ளியை இந்திரலோகமாக்கி
நீ ரம்பை ஊர்வசி மேனகையாகி
அங்கும் இங்கும் உலவினாய்
பத்து முடித்து இருபது ஆண்டுகளாயிற்று
இன்னமும் அதே நீலம்- மஞ்சள் தாவணியில்
அப்படியேதான் என்னுள் உலவிக்கொண்டிருந்தாய்
ஏதேச்சையாக ஷாப்பிங் மால் வாசலில்
காளியம்மன் சாயலில் இருந்த
அந்த பெண்ணை பார்க்கும் வரை
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக