நமக்கு வாய்த்த
1008 துன்பங்களில் ஒன்று
அடர்நீல நிறச் சேலையில்
கண்ணத்தில் கை வைத்தப்படி
முதல் படியிலேயே
அமர்ந்துவிடுகிறது…
இரண்டுபடி ஏற்றிவிட்டால்
நான்குபடி சறுக்கும் அதற்கு
வெள்ளணியும் இல்லை
செவ்வணியும் இல்லை
இப்போது நாம் அதனுடன்
கைக் குலுக்கிக்கொள்ளலாம்
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக