04 ஏப்ரல் 2021

நீலம் பூத்தக் கைகள்

நமக்கு வாய்த்த

1008 துன்பங்களில் ஒன்று

அடர்நீல நிறச் சேலையில்

கண்ணத்தில் கை வைத்தப்படி

முதல் படியிலேயே

அமர்ந்துவிடுகிறது…

இரண்டுபடி ஏற்றிவிட்டால்

நான்குபடி சறுக்கும் அதற்கு

வெள்ளணியும் இல்லை

செவ்வணியும் இல்லை

இப்போது நாம் அதனுடன்

கைக் குலுக்கிக்கொள்ளலாம்

 

- மகேஷ் பொன்



கருத்துகள் இல்லை: