14 மே 2020

இப்போது நான் வெளியேற வேண்டும்

பாலுக்காக அழும்
குழந்தையின் பசிதான்
மிகக் கொடிய நோய்

ஊழிகாலத்தில்
ஊர் தொலைவிலிருப்பதுதான்
மிக வலிய ரணம்

வறுமையின் பிடியில்
இருத்தும் தனிமைதான்
மிகப் பெரிய சமூகவிலக்கல்

எங்கள் வீட்டிலிருப்பது
அட்சயப்பாத்திரம் அல்ல
வெறும் ஈயப்பாத்திரம்தான்
அது நேற்றிலிருந்து
ஈஈயென இளிக்கிறது
இப்போது நான் வெளியேற வேண்டும்

கார்பன்மோனாக்சைடை சுவாசிக்க முடிகிறது
ரசாயனத்தை குடிக்க முடிகிறது
பிளாஸ்டிக்கை திண்க முடிகிறது
கார்ப்ரேட் தொற்றை சமாளிக்க முடிகிறது
ஒரு வைரசுடன் வாழ முடியாதா
இப்போதே நான் வெளியேற வேண்டும்


- மகேஷ் பொன்




கருத்துகள் இல்லை: