30 மார்ச் 2024

நேற்று காலை 8 மணியளவில் செத்துவிட்டேன்

என் எதிரிகள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
முனை மழுங்கியவை
அவர்கள்
வீச்சருவாள் சரியாக வெட்டாது
பிச்சுவாகத்தி சரியாக குத்தாது
அதனால்தான்
பிழைத்துக்கிடக்கிறேன்….
ஆனால்
எனக்கு பிரியமானவர்கள்
என்னை கொல்வதற்காக
வைத்திருக்கும் ஆயுதங்கள்
மிகமிகக் கூர்மையானவை
அபபடியொரு
கூர்மையானச் சொல்லை எடுத்துதான்
நேற்று நீ
என்னை சதக் சதக் என குத்தினாய்….
 
          - மகேஷ் பொன்

 
 

கருத்துகள் இல்லை: