29 மார்ச் 2020

நேற்றை வேண்டுகிறேன்



தேனீர் அருந்துவது…
புகை வளிப்பது…
தினம் ஒரு செல்ஃபி…
கொஞ்ச நாள் வழக்கம்தான்
சட்டென்று யாரால் விட்டுவிட முடிகிறது?
ஒன்பதாயிரத்து அறுபத்தாறு நாட்கள்
எனக்கு பழக்கமாயிருந்த ஒற்றைச் சொல்
பட்டென்று உதிர்ந்துவிட்டதே -
என் அகராதியிலிருந்து நிரந்தரமாய்!

தேவைகளின் நிறைவும்
அன்புக்கு அம்மாவும்
பாதுகாப்புக்கு உடன்பிறப்பும்
உறவுக்கு உற்றாரும் -
இருக்கிறோம் என்பதை
என்னவெல்லாம் செய்து நிருபித்தாலும்
நான் அதை உணர்ந்துக்கொள்ள
நீ இருக்கிறாய் என்பது மட்டும் போதுமே!

அன்பின் குரல் ஊமையாகிவிட்டது…
பரிவின் பார்வை குருடாகிவிட்டது…
அணைப்பின் கரங்கள் ஊனமாகிவிட்டது…
பாதுகாப்பின் கால்கள் முடமாகிவிட்டது…
இனி உடன் நடப்பார் யார் எவரோ?

இளைப்பாறும் ஆலமரம் சரிந்துவிட்டதே!
நிறுத்ததிலிருந்து பாதிதூரம் வந்துவிட்டேன்
வியர்க்கும்! வீடு வந்து சேரமாட்டேனா…
நின் இயலாமையைக் கண்டதேயில்லை
இனி என் போதமையை ஏற்கமாட்டேனா…
எனக்காக யாரும் இருக்கலாம்
ஆனாலும் நீ இல்லாத ராஜ்யத்தில்
நான் இளவரசியாக இருக்கமுடியாதே!

தாய்யை இழக்கையில் 
பாசத்தையும்
தந்தையை இழக்கையில் -
இழக்கிறோம்
அடைக்கோழியின் கதகதப்பையும்...
பிள்ளைகளையும் பத்துமாதம் சுமந்தவளையும்
சேர்த்து சுமந்த சுமைதாங்கி
சற்று நேரம் ஓய்வு கொள்ளுமோ?

ஒரு கோர விபத்து…
ஒரு குண்டு வெடிப்பு…
ஒரு பூகம்பம்…
ஒரு கொடும் மழை…
ஒரு பெரும் புயல்…
ஒரு ஆழிப்பேரலை…
ஒரு கொல்லை நோய்…
எதுவும் நிகழாதவரை
நேற்றும் இன்றும் ஒரு நாள்தான்
நாளையும் மற்றுமொரு நாள்தான்
ஆனால் இன்றைய மீளாப் பிரிவு
ஒரு பேரிழப்பு! ஒரு பேரிடர்!!
எனை உச்சத்தில் தொங்கவிட்டுவிட்டு
ஏணியை உருவிக்கொண்டது அது

அம்மா செல்லமா? அப்பா செல்லமா?
நான் யார் செல்லம் என்று
எனது ஒளிவட்டம் சொல்லுமே
சூரியன் ஒளிதர மறுத்தப் பின்
இந்த மதி எங்ஙம் ஒளிருமோ

உன் கடைசி வார்த்தையின் சாரம் என்ன
உன் கடைசி பார்வையின் அர்த்தம் என்ன
உன் கடைசி தொடுகையின் அழுத்தம் என்ன
உன் கடைசி எண்ணத்தின் ஓட்டம் என்ன
இந்த வெண்மதியை திருமதியாக்காமல்
வெறுமதியாய் விட்டோமென
நிம்மதியில்லாமல் போனாயா என் அப்பா

றெக்கை முளைதேன்!
மேலே பறப்பேன்!!
என் பெருமைப் பேச நீ இல்லையே!!!
அதானாலென்ன
உன் இன்சியலோடுதான் வாழப்போகிறேன்…
”என்னோற்றான் கொல்எனும் சொல்”
அந் நாளை வேண்டுகிறேன்.
 
- மகேஷ் பொன்




11 மார்ச் 2020

பெஸ்ட்டியாக ஆசிர்வதிக்கப்பட்டவன்


நட்புக்கு கொஞ்சம் மேல்
காதலுக்கு கொஞ்சம் கீழ்
நட்பும் காதலும் அனாதையானால்
நல்லாண்மை இரண்டுமாக ஆகிவிடுகிறது

நான் அவளின் வளர்ப்பு நாய்
யாரை குரைக்க வேண்டும்
யாரை கடிக்க வேண்டும்
யாரிடம் வாலாட்ட வேண்டும்
என பழக்கப்படுத்தி வைத்திருக்கிறாள்

நான் அவளின் உப்பிய மணிபர்ஸ்
கடைசி ஒரு ரூபாயயையும் கரியாக்கி
கடைக் கண்ணில் மைப் பூசிக்கொள்கிறாள்

நான் அவளின் பூப்போட்ட கைக்குட்டை
எப்போதும் கையில் இருக்கும் அதை
அவளது கண்ணீர் துடைக்கவும்
எனது கண்கட்டி விளையாடவும்
ஸ்கூட்டியில் விழுந்த எச்சம் நீக்கவும்
சமயத்தில் ருதுகால திடீர் விஸ்பராகவும்
குட்டிக்குரா டால்கம் தூவி பயன்படுத்துகிறாள்

நான் அவளின் ஹைஹீல்ஸ் செருப்பு
அவளை ஒய்யாரமாய் காட்டினாலும்
தனது வீட்டிற்குள் நுழைகையில்
என்னை ஓரமாய் கழட்டிவிட்டுதான் போகிறாள்

நான் அவளின் அலாவுதீன் அற்புதவிளக்கு
ஒற்றை உரசலுக்கு கிளம்பிய அடிமைப்பூதம்
மலையைப் பெயர்க்கிறது
அலையை நிறுத்துகிறது
மின்கம்பத்தில் ஏறுகிறது
சாக்கடையில் குதிக்கிறது
புலியென மாறி உருமுகிறது
பூனையென மாறி மியாவுகிறது
படுக்கையறையில் உலவுகிறது
பாட்டிலுக்குள் அடைபடுகிறது

நீங்கள் கூறுவது போல்
அவள் என்னை எல்லாவற்றிற்கும்
பயன்படுத்ததான் செய்கிறாள்
இருப்பினும்
நானும் அவளை ஒன்றிற்கு மட்டுமாவது
பயன்படுத்ததான் ஏங்குகிறேன்

மற்றபடி நம்பலாம்
நாங்கள் நல்ல நண்பர்கள்தான்
இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருகிறோம்
கைக்கோர்த்து தூரம் நடந்திருக்கிறோம்
மெசஞ்சரில் இரவுகளைத் தொலைத்திருக்கிறோம்
தோள் சாய்ந்தபடி நீள பயனித்திருக்கிறோம்
கவிதையை ரசிக்கிறோம்
சினிமா பார்க்கிறோம்
அரசியல் பேசுகிறோம்
அரட்டை அடிக்கிறோம்
நான் டாய்லெட் வாயிலில் நின்றிருந்திருக்கிறேன்
அவள் ஒயின்ஷாப் எதிரில் காத்திருந்திருக்கிறாள்
டால்ஸ்டாய், சேக்ஸ்பியர், பாரதி, சுஜாதா,
இன்னும் பெண்ணியக் கவிஞர்களை எல்லாம்
என் வீட்டிற்குள் அழைத்து வந்தவள் அவள்
ழாக்டெரிடா, மார்க்ஸ், அம்பேத்கர், பாரதிநிவேதன்
இன்னும் சமூகப் புரட்சியாளர்களை எல்லாம்
அவளுக்கு அறிமுகம் செய்தவன் நான்
கோனவாய் சுயமிக்கும்
ஃப்ரி ஃபையர் விளையாட்டுக்கும்
இளையராஜா பாடலுக்கும்
எங்களுக்குள் ஒத்த ரசனை இருக்கிறது

அவள் எனது ஒரே நல்லாள்
இது வல்லான்களின் காலம்
எவனையும் நெருங்கவிடக்கூடாது
அவள் காதல் செய்யலாம் ஆனால்
காதலன் பெரும் துரோகமிளைக்க வேண்டும்
அவள் கல்யாணம் முடிக்கலாம் ஆனால்
கணவன் சந்தேகித்து சண்டையிட வேண்டும்
பெஸ்ட்டிகளின் முத்தம்
காமத்தில் சேராது என்பாள்
அவளுடன் தனியறையில் தங்கநேர்ந்த போது
பிடிப்பான மூன்று ஜட்டிகளைப் போட்டிருந்தேன்

ஓருயிர் ஈருடலாய் திரியுமிது
எதிர்பார்ப்புகளின்றி இயங்குமென்பது
நம்பிக்கொல்லும் பொய்தான்
மற்றப்படி நல்லாண்மை காத்திருப்பது
காய் கனிவதற்காகவே
இலவு காத்த கிளியென ஆவதும்
பழந்தின்னி வவ்வாலென ஆவதும்
பொறுமையின் உச்சத்தில் இருக்கிறது
பெஸ்ட்டியாக ஆசிர்வதிக்கப்பட்டவன்
இன்னும் சிலகாலம் காத்திருக்கலாம்


- மகேஷ் பொன்